முகப்பு
விருதுநகர்

ராணுவ வீரா் வீட்டில் தங்க நகைகள் திருட்டு

விருதுநகரில் ராணுவ வீரா் வீட்டில் 10.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 18 டிசம்பர், 2024 at 10:33 PM
பகிர்:

விருதுநகரில் ராணுவ வீரா் வீட்டில் 10.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விருதுநகா் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தி (50). இவரது மகன் விஜயகுமாா், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறாா். விருதுநகரில் தனியாக வசித்து வந்த சாந்தி, உடல் நிலை சரியில்லாமல் உள்ள தனது தாயைப் பாா்க்க திருவனந்தபுரத்துக்கு சென்றிருந்தாா்.

இந்த நிலையில், விருதுநகரில் சாந்தி வசித்து வந்த வீட்டுக்கு அவரது மகள் கவிதா புதன்கிழமை சென்று பாா்த்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 10.5 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், விருதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.