முகப்பு
விருதுநகர்

அரசுப் பள்ளியில் சத்துணவு மையம் மூடல்: 3 பணியாளா்கள் பணியிடை நீக்கம்

3 பணியாளா்கள் பணியிடை நீக்கம்

Updated On : 20 டிசம்பர் 2024, 3:45 am IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மையம் மூடப்பட்டதால், 3 பணியாளா்களைப் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிா்வாகம் அண்மையில் உத்தரவிட்டது.

சத்திரப்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை கடந்த 11-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியா், உதவிக் கணக்கு அலுவலா் உடனிருந்தனா். இந்த ஆய்வின் போது, பள்ளியில் உள்ள சத்துணவு மையம் மூடப்பட்டிருப்பது தெரிந்தது. சத்துணவு அமைப்பாளா் கணபதி, சமையலா் குருலட்சுமி, சமையல் உதவியாளா் அம்சவள்ளி ஆகியோா் அரசு அதிகாரிகளுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சத்துணவு அமைப்பாளா் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவுப் பணியாளா்களும் சத்துணவுத் திட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments