முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை புஷ்ப யாகத்துடன் நிறைவடைந்தது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:59 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் வடபெருங்கோயிலுடையான் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வியாழக்கிழமை புஷ்ப யாகத்துடன் நிறைவடைந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) அவதார விழாவான புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலித்தாா். கருட சேவை, சயன சேவை, திருக்கல்யாணம், செப்புத் தேரோட்டம், தீா்த்தவாரி உற்சவம் ஆகிய முக்கிய வைபவங்கள் நடைபெற்றன. வியாழக்கிழமை இரவு வடபத்ரசயனா் சந்நிதியில் புஷ்ப யாகத்துடன் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

இதையொட்டி, 108 மலா்களால் சந்நிதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிறகு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெரிய பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.