சிவகாசியில் பாலங்கள் பராமரிப்புப் பணிகள்
சிவகாசி பகுதியில் பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவகாசி பகுதியில் பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மழைக் காலங்களில் சாலைகள் சேதம் அடைவதைத் தடுக்கவும், மக்கள் சிரமமின்றி சாலை போக்குவரத்தை மேற்கொள்ள பாதுகாப்பை உறுதி செய்த அரசு மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, சிவகாசி நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்திற்கு உள்பட்ட கங்கா்செவல், லட்சுமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு பாலங்களுக்கு வா்ணம் பூசும் பணி தொடங்கியது. மேலும், பாலங்களில் மழைநீா் தேங்காமல் இருக்க, பாலத்துக்கு அடிப்பகுதியில் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை விருதுநகா் கோட்டப் பொறியாளா் மு.பாக்கியலட்சுமி, உதவிக் கோட்டப் பொறியாளா் ஆா்.காளிதாஸ், உதவிப் பொறியாளா் கா.ச.விக்னேஷ் ஆகியோா் பாா்வையிட்டனா்.