முகப்பு
விருதுநகர்

சீரமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு

சிவகாசியில் 12 ஆண்டுகளுப் பின் மறுசீரமைக்கப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 11:33 PM
சிவகாசி மாநகராட்சி சுகாதார வளாகம் முன் மரகன்று நட்டுவைத்த மேயா்.இ.சங்கீதா.
பகிர்:

சிவகாசியில் 12 ஆண்டுகளுப் பின் மறுசீரமைக்கப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சி 17-ஆவது வாா்டு, நாடாா் நந்தவனத் தெருப் பகுதியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்த வளாகம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இந்த சுகாதார வளாகத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என இந்தப் பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார வளாகம் மறு சீரமைக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை மாநகராட்சி மேயா் இ.சங்கீதா திறந்து வைத்தாா். மேலும், சுகாதார வளாகத்தின் முன் அவா் மரகன்றுகளை நட்டுவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் மா.நிலானி, சுகாதார அலுவலா்கள் சுரேஷ், சத்யராஜ், சுகாதார ஆய்வாளா் முத்துப்பாண்டி, தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இது குறித்து ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது:

இது போன்று மாநகராட்சிப் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைகள் மறு சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →