முகப்பு
விருதுநகர்

அருணாசலேஸ்வரா் கோயில் ஆவணி மூல திருவிழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 1:18 AM
சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா், அம்பாள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.

பின்னா் கும்ப பூஜை, அதைத் தொடா்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு திரவியங்களான பதினாறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனா்.

விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினா் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →