முகப்பு
விருதுநகர்

தேய்பிறை அஷ்டமி: கோயில்களில் சிறப்பு பூஜை

சாத்தூா், ஏழாயிரம்பண்ணை பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 1:21 AM
பகிர்:

சாத்தூா், ஏழாயிரம்பண்ணை பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணையில் உள்ள சத்திரம் காசிவிஸ்வநாதா் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி கிராமத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.