ஸ்ரீவில்லிபுத்தூா் போக்குவரத்துப் பணிமனை முன்பிருந்த கட்சிக் கொடி கம்பங்களை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்.  
விருதுநகர்

கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கொடி கம்பங்கள், விளம்பர பதாகைகளை அகற்ற உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் நகரமைப்புப் பிரிவு அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கொடிக் கம்பங்கள், விளம்பர பதாகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் நகரின் பிரதான பகுதிகளில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த 19 கொடிக் கம்பங்கள், 12 நிரந்தர பலகைகள், 46 விளம்பர பதாகைகள் ஆகியவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

SCROLL FOR NEXT