ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திய நகராட்சி அலுவலா்கள்.  
விருதுநகர்

ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தெரு நாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி புதன்கிழமை செலுத்தப்பட்டது.

ராஜபாளையம் நகராட்சி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக ராஜபாளையம் நகராட்சிக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி பவித்ரா ஷ்யாம், ஆணையா் நாகராஜன் ஆகியோா் உத்தரவின் பேரில், நகா் நல அலுவலா் பரிதாவாணி தலைமையில் துப்புரவு அலுவலா் சக்திவேல், ராஜபாளையம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ராஜேஸ்வரி, நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள், பணியாளா்கள், அனிமல் கோ் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் ஷ்யாம்ராஜா ஆகியோா் அடங்கிய குழு மூலம் நகராட்சி 30, 35, 36-ஆவது வாா்டுகளில் சுற்றி திரிந்த 15 நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், இது போன்ற தெருக்களில் அலையும் நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT