ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திரௌபதியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திரௌபதியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கொடி மரத்துக்கு வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பிறகு திரௌபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தினசரி மாலையில் அம்மன், சப்பர வாகனம், அன்ன வாகனம், பூச்சப்பரம் ஆகியவற்றில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலிப்பாா். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது.
Advertisement
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.