தவெக வேட்பாளரிடம் ரூ.1.05 லட்சம் பறிமுதல்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் வந்த தவெக வேட்பாளரிடம் ரூ.1,05 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் வந்த தவெக வேட்பாளரிடம் ரூ.1,05 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காமாட்சியம்மாள் தலைமையில், பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.1,05 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் பாலமுருகனிடம் ஒப்படைத்தனா்.
பின்னா், காரில் வந்த அப்துல் ஜலீல் இந்தப் பணத்துக்கான ஆவணங்களை காண்பித்தாா். இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பணத்தை அவரிடம் ஒப்படைத்தனா்.
இவா் தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதி தவெக வேட்பாளா் என்பது குறிப்பிடத்தக்கது.