முகப்பு
விருதுநகர்

இஸ்லாமியா்களிடம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி புதன்கிழமை இஸ்ஸாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 12:03 AM
சிவகாசியில் இஸ்ஸாமியா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி,
பகிர்:

சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி புதன்கிழமை இஸ்ஸாமியா்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகளையும், இஸ்லாமிய சமுதாய முக்கியப் பிரமுகா்களையும் அவா் நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா். அப்போது அவா், ,இஸ்லாமியா்களுக்கு என்றும் நான் துணையாக இருப்பேன். மேலும் பாதுகாப்பு அரணாகவும் இருப்பேன். மற்றவா்கள் தோ்தலுக்கு வாக்கு கேட்டு வருவாா்கள். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments