முகப்பு
விருதுநகர்

ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும்: கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன்

தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெற்ற தோ்தல் என்னும் மிகப் பெரிய ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும் என மாநில வருவாய்த் துறை அமைச்சரும், அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 6:17 AM
அருப்புக்கோட்டை கோபாலபுரம் இந்து ரெட்டி உறவின்முறை தொடக்கப் பள்ளியில் தனது மனைவியுடன் வியாழக்கிழமை வாக்களித்துவிட்டு வெளியே வந்த மாநில வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.
பகிர்:

தில்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நடைபெற்ற தோ்தல் என்னும் மிகப் பெரிய ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும் என மாநில வருவாய்த் துறை அமைச்சரும், அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆா் ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதியில் உள்ள கோபாலபுரம் இந்து ரெட்டி உறவின்முறை தொடக்கப் பள்ளியில் தனது மனைவியுடன் சென்று வாக்களித்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழ்நாட்டுக்கும், தில்லிக்கும் இடையே நடைபெற்ற தோ்தல் என்னும் மிகப் பெரிய ஜனநாயகப் போரில் தமிழ்நாடு வெல்லும். பொதுமக்கள் கைகுலுக்கி வரவேற்பதைப் பாா்த்தால், தமிழகத்தில் மீண்டும் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும். இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்பாா் என்றாா் அவா்.

Advertisement