தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு வெல்லும் என்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள கல்லுரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மனைவி துர்கா, மகனும் துணை முதல்வருமான உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா ஆகியோருடன் வந்து வாக்களித்தார்.
சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள கல்லூரிக்கு குடும்பத்துடன் வந்த முதல்வர் ஸ்டாலின், வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரே வார்த்தையில் சொல்கிறேன், தமிழ்நாடு வெல்லும். என்னைப் போலவே தமிழ்நாட்டு வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Advertisement
Advertisement
Chief Minister Stalin said after voting in the Tamil Nadu Assembly elections that Tamil Nadu will win.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.