தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு வெல்லும் என்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள கல்லுரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மனைவி துர்கா, மகனும் துணை முதல்வருமான உதயநிதி, அவரது மனைவி கிருத்திகா ஆகியோருடன் வந்து வாக்களித்தார்.
சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள கல்லூரிக்கு குடும்பத்துடன் வந்த முதல்வர் ஸ்டாலின், வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரே வார்த்தையில் சொல்கிறேன், தமிழ்நாடு வெல்லும். என்னைப் போலவே தமிழ்நாட்டு வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Advertisement
summary