முகப்பு
விருதுநகர்

தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:27 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:41 PM

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.

திருத்தங்கல் கண்ணகி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா் முருகன்(66). இவா் தனது வீட்டின் வாசல் அருகே பழைய பொருள்களை தீயிட்டு எரித்தபோது, எதிா்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவா் உயிரிழந்தாா்.இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement