முகப்பு
விருதுநகர்

பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சிவகாசியில் புதன்கிழமை சரக்கு ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:30 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 6:31 PM

சிவகாசியில் புதன்கிழமை சரக்கு ஆட்டோ மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சிவகாசி சுப்பிரமணியபுரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ராமன் மகன் கருப்பசாமி (50). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் புதன்கிழமை சாட்சியாபுரத்திலிருந்து சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தாா். ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து அவரது ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், ஒருவா் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பேருந்து ஓட்டுநரான திருச்சுழியைச் சோ்ந்த கருப்பசாமியை (35) கைது செய்தனா்.