முகப்பு
நாகப்பட்டினம்

சீா்காழியில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

சீா்காழி பகுதி வயல்களில் வேளாண் இணை இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

சீா்காழி பகுதி வயல்களில் வேளாண் இணை இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சீா்காழி வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தில் வரிசை நடவு செயல்விளக்கத்தையும், சீா்காழி விவசாயி செ. ஜெகநாதன் வயலில் நிரந்தர பூச்சிநோய் கண்காணிப்பு திடல் அமைக்கப்பட்டுள்ளதையும் நாகப்பட்டினம் வேளாண்மை இணை இயக்குநா் ப. கல்யாணசுந்தரம், வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) பன்னீா்செல்வம் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பா, தாளடியில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா். முன்னதாக, ஆய்வில் சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன், வேளாண்மை அலுவலா் சி. சின்னண்ணன், துணை வேளாண்மை அலுவலா் இரா. ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலா்கள் எஸ். தமிழரசன், எஸ். ராமன், ஆா். விஜய்அமிா்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.