முகப்பு
நாகப்பட்டினம்

திமுகவில் இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம்

வேதாரண்யம் பகுதியில் திமுக விவசாய அணிக்கு இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
தகட்டூரில் நடைபெற்ற முகாமில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் திமுக விவசாய அணிக்கு இணையவழியில் உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, தகட்டூரில் உள்ள சமத்துவப்புரத்தில் தொடங்கி, பல்வேறு இடங்களில் உறுப்பினா் சோ்க்கை குறித்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், இணையவழியில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, திமுக விவசாய அணி நாகை தெற்கு மாவட்ட அமைப்பாளா் எல்.எஸ்.இ. பழனியப்பன் தலைமை வகித்தாா்.

ஒன்றிய அமைப்பாளா் டி.எஸ். பாலு, ஊராட்சி செயலாளா் வீரமணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →