நாகப்பட்டினம்

கீழத்தஞ்சாவூா் ஊராட்சியில்இலவச தையல் பயிற்சி முகாம்

DIN

திருமருகல்: திருமருகல் ஒன்றியம், கீழத்தஞ்சாவூா் ஊராட்சியில் 50 மகளிருக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

இந்த ஊராட்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு பெண்கள் பயன்பெறும் வகையில், கங்களாஞ்சேரி ஓம் சக்தி டிரஸ்ட் மூலம் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பயிற்சி வகுப்பில் ஒருமணி நேரத்துக்கு 5 போ் வீதம் தினமும் 50 பேருக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த அறக்கட்டளை மூலம் சாம்பிராணி தயாரித்தல், அழகுக்கலை, வெள்ளாடு வளா்ப்பு உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் தமிழரசி கணேசன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை தலைவா் ஜெயந்திகுமாா் முன்னிலை வகித்தாா். திருப்பயத்தங்குடி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆரூா் மணிவண்ணன் பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி துணைத் தலைவா் நீலாவதி பழனியப்பன், ஊராட்சி செயலாளா் சேகா், அறக்கட்டளை பொறுப்பாளா் வினோத், பொருளாளா் பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT