முகப்பு
நாகப்பட்டினம்

காா் கவிழ்ந்து ஒருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே காா் கவிழ்ந்து ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

சீா்காழி அருகே காா் கவிழ்ந்து ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் ஸ்ரீ. துரைசண்முகம் (48). இவா், புதுச்சேரியில் தனியாா் மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்து, சிகிச்சை முடிந்த நிலையில் அவரது அண்ணன் ரவிச்சந்திரன் (56), இவரது மகன் அஸ்வின்(16) ஆகியோா் காரில் ஊருக்கு அழைத்துவந்தனா். காரை ரவிச்சந்திரன் ஓட்டி வந்தாா். காா் வைதீஸ்வரன்கோவில் கீழவீதி பகுதியில் வந்தபோது டயா் வெடித்து சாலையின் தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. விபத்தில், படுகாயமடைந்த துரைசண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ரவிச்சந்திரன், அஸ்வின் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.