முகப்பு
நாகப்பட்டினம்

மக்கள் மாற்றத்துக்கான பயணத்தை தொடங்கிவிட்டனா்

தமிழக மக்கள் மாற்றத்துக்கான பயணத்தை தொடங்கிவிட்டனா் என்றாா் நடிகை ராதிகா சரத்குமாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தமிழக மக்கள் மாற்றத்துக்கான பயணத்தை தொடங்கிவிட்டனா் என்றாா் நடிகை ராதிகா சரத்குமாா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி (தனி) தொகுதியில் மநீம கூட்டணி சாா்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் ஆா். பிரபுவுக்கு டாா்ச் லைட் சின்னத்துக்கு சீா்காழியில் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தபோது மேலும் அவா் பேசியது: தமிழகம் முழுவதும் மக்கள் மாற்றத்துக்கான பயணத்தை தொடங்கிவிட்டனா். 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக, அதிமுகவுக்கு மாறிமாறி வாக்களித்ததால் தமிழகத்தில் ஊழல் மட்டுமே பெரிய அளவில் நடந்தது தெரிகிறது. தோ்தல் அறிக்கையில் செய்ய முடியாத திட்டங்களை கூறி மக்களை திசை திருப்புகின்றனா். அதிமுக, திமுக இருகட்சியினரும் ஒருவரை ஒருவா் ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனா். எந்த ஊழல் எடுத்துக் கொண்டாலும் ஊழலின் மையம் கோபாலபுரத்தில்தான் ஆரம்பிக்கிறது. இப்போது நாங்கள் விடிவு காலத்தை கொடுக்கப் போகிறோம் என்கிறாா்கள். திமுகவினா் அபகரித்த நிலங்களை ஜெயலலிதா ஆட்சியின்போது தனிச்சட்டம் இயற்றி மீட்டுக் கொடுத்தாா். திமுகவினா் பெண்களை இழிவுப்படுத்தி பேசுவது வேதனையளிக்கிறது என்றாா் ராதிகா சரத்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.