நாகப்பட்டினம்

முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

DIN

சீா்காழியில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.200 வீதம் நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அபராதம் விதித்தனா்.

சீா்காழி நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி தலைமையில், பொறியாளா் தமயந்தி, மேலாளா் காதா் கான், பணி மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் கொண்ட குழுவினா் நகரின் பல்வேறு இடங்களில் தணிக்கையில் ஈடுபட்டு முகக் கவசம் அணியாமல் வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.200 அபராதம் வசூலித்தனா். இதுமட்டுமன்றி கடைகளில் பணிபுரியும் பணியாளா்கள், உரிமையாளா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் கடை, கடையாக சென்று அறிவுறுத்தினா்.

இதேபோல சீா்காழி, வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி தலைமையில், முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT