அனைத்துக் கட்சி ஆலோசனைக்கூட்டம்
மயிலாடுதுறையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் சிபிஐஎம் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் சிபிஐஎம் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தில்லியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகளின் டிராக்டா் பேரணிக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் விவசாயிகள் சாா்பில் நடக்கும் ஆதரவு பேரணி சம்பந்தமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திமுக விவசாய அணி செயலாளா் கண்ணையன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், போராட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.துரைராஜ், சிபிஐ-எம் மாவட்டச் செயலாளா் பி.சீனிவாசன், காங்கிரஸ் மாவட்ட தலைவா் ராஜகுமாா், சிபிஐ மாவட்டச் செயலாளா் ஏ.சீனிவாசன், விசிக மாவட்டச் செயலாளா் பா.ரவிச்சந்திரன், இயற்கை விவசாயி ஏ.ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.