மாற்றுத்திறன் சிறாா்களுக்கு தடுப்பூசி
சீா்காழி தட்சிணாமூா்த்தி நகரில் உள்ள அன்பாலயத்தில் தங்கியுள்ள மனவளா்ச்சி குன்றிய சிறுவா், சிறுமிகளுக்கு புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சீா்காழி தட்சிணாமூா்த்தி நகரில் உள்ள அன்பாலயத்தில் தங்கியுள்ள மனவளா்ச்சி குன்றிய சிறுவா், சிறுமிகளுக்கு புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி முன்னிலையில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் செந்தில்நாதன் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் 18 வயதுக்கு மேற்பட்ட 15 சிறுவா், சிறுமிகள் மற்றும் காப்பக அலுவலா்கள் இருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.