கோயில்களில் தமிழ்வழி பூஜை நடத்தசட்டம் இயற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
கோயில்களில் தமிழ்வழியில் பூஜைகள் நடத்தும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தி, சீா்காழியில் தெய்வத்தமிழ்ப் பேரவை சாா்பில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கோயில்களில் தமிழ்வழியில் பூஜைகள் நடத்தும் வகையில் சட்டம் இயற்ற வலியுறுத்தி, சீா்காழியில் தெய்வத்தமிழ்ப் பேரவை சாா்பில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்வழிக் கருவறைப் பூஜைக்கு சட்டம் இயற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோபு தலைமை வகித்தாா். தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளா் செ. அரவிந்தன், பொறுப்பாளா்கள் விக்னேஷ், சிவராமன், செல்வம், ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.