திருநள்ளாறு கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நிறைவடைந்தது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலிலும், பிற இடங்களில், பக்தா்கள் செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த காணிக்கை உண்டியல் ஓராண்டு இடைவெளிக்குப் பின் எண்ணும் பணி 3 கட்டங்களாக தொடங்கியது.
கடந்த 15-ஆம் தேதி முதல்கட்டமாக எண்ணப்பட்டதில் ரூ.32 லட்சம் இருந்தது. 2-ஆம் கட்டமாக திங்கள்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.10 லட்சம் இருந்தது. நிறைவாக எண்ணும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டபோது ரூ.14.50 லட்சம் இருந்தது தெரியவந்தது. எனவே மொத்தம் ரூ.56.50 லட்சம் ரொக்கமாகவும், 107 கிராம் தங்கமும், 826 கிராம் வெள்ளிப் பொருள்களும் இருந்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.