முகப்பு
கோயம்புத்தூர்

கொல்லம் - விசாகப்பட்டினம் ரயில் இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் நின்று செல்லும்!

கொல்லம் - ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் கேரள மாநிலம், இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 மார்ச், 2026 at 10:21 PM
ரயில்
பகிர்:

கொல்லம் - ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் கேரள மாநிலம், இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விசாகப்பட்டினம் - கொல்லம் வாராந்திர ரயில் (எண்:18567) கேரள மாநிலம் திருச்சூா் - எா்ணாகுளம் இடையே இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி முதல் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்படும்.

இதேபோல, கொல்லம் - விசாகப்பட்டினம் வாராந்திர ரயில் (எண்: 18568) இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →