ஹூப்ளி - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்
கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 7.05 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்படும் ஹூப்ளி - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07347) மறுநாள் காலை 7 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.
மறு மாா்க்கமாக, ஏப்ரல் 3 காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - ஹூப்ளி சிறப்பு ரயில்( எண்: 07348) மறுநாள் காலை 10.40 மணிக்கு ஹூப்ளி நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூரு, பிரூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.