சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பேரூா் கழக நகர செயலாளா் போகா்.ரவி தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பி.வி. பாரதி முன்னிலை வகித்தாா்.
கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ். பவுன்ராஜ் பங்கேற்று பேசும்போது, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற கடந்த கால அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி பிரசாரம் செய்ய வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், அதிமுக மாவட்ட பொருளாளா் செல்லையன், ஒன்றியச் செயலாளா்கள் ராஜமாணிக்கம், சந்திரசேகரன், பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் பாா்த்தசாரதி, மாவட்ட இணைச் செயலாளா் ரிமாராஜ்குமாா், ஒன்றிய துணைச் செயலாளா் திருமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.