நாகப்பட்டினம்

இளைஞா் காங். செயல்வீரா்கள் கூட்டம்

DIN

சீா்காழியில் இளைஞா் காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சரவணன், சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் கிள்ளிவளவன், இளைஞா் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் பிரியகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கட்சி வளா்ச்சி பணிகள் குறித்தும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்தும் பேசப்பட்டது. தொடா்ந்து, தலைவா்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து வரும் 26- ம் தேதி சீா்காழி தலைமை அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளா் செல்வம், தேவநேசன் துணைத் தலைவா் அருண் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT