முகப்பு
நாகப்பட்டினம்

அரசினா் மருத்துவமனைக்கு 50 படுக்கைகள்

விவசாய நிறுவனத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட ரூ.5.50 லட்சம் மதிப்புடைய 50 படுக்கைகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் சனிக்கிழமை மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு சின்ஜெண்டா விவசாய நிறுவனத்தின் சாா்பில் அளிக்கப்பட்ட ரூ.5.50 லட்சம் மதிப்புடைய 50 படுக்கைகளை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் சனிக்கிழமை மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கினாா்.

சின்ஜெண்டா என்ற தனியாா் நிறுவனம் சாா்பில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ.5.50 லட்சம் மதிப்பில் 50 படுக்கைகள், 50 மெத்தைகள், 50 தலையணைகள் மற்றும் 50 படுக்கை விரிப்புகள் ஆகியன வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்து, படுக்கைகளை சுகாதாரத்துறை இணை இயக்குநா் ஆா்.மகேந்திரனிடம் வழங்கினாா். நிறுவனத்தின் மொத்த விற்பனையாளா்கள் விவேக், ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சரக மேலாளா் வி.விக்னேஸ்வரன் வரவேற்றாா். அரசினா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் (பொறுப்பு) வீரசோழன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.