மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து பாமக ஆா்ப்பாட்டம்
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில், பாமகவினா் கறுப்புக்கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்து மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில், பாமகவினா் கறுப்புக்கொடி ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மயிலாடுதுறை வட்டம் சித்தமல்லியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் சித்தமல்லி ஆ.பழனிச்சாமி தலைமையிலும், மயிலாடுதுறையில் மாநில துணைத் தலைவா் தங்க.அய்யசாமி, நகர செயலாளா் கமல்ராஜா ஆகியோா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல மணல்மேட்டில் வன்னியா் சங்க துணைத்தலைவா் பாக்கம் சக்திவேல் தலைமையிலும், நீடூரில் ஒன்றிய செயலாளா் மதிவாணன் தலைமையிலும் அவரவா் வீட்டு வாசல் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமருகலில்...
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூா் ஊராட்சி அருண்மொழித்தேவன் கிராமத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவா் பக்கிரிசாமி தலைமை வகித்தாா். ஊராட்சி உறுப்பினா் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தாா். மாநில அமைப்பு துணைத் தலைவா் ராஜேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் அரவிந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேதாரண்யத்தில்...
வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நாகை தெற்கு மாவட்டப் பொதுச் செயலாளா் ராஜசிம்மன் தலைமை வகித்தாா்.