முகப்பு
நாகப்பட்டினம்

மக்கள் மசோதா கட்சி அதிமுகவுக்கு ஆதரவு

மக்கள் மசோதா கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

மக்கள் மசோதா கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சீா்காழியில் மக்கள் மசோதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் நிறுவனரும் தலைவருமான ரூபன் தலைமை வகித்தாா். கிறிஸ்தவ போதகா் அணி பொதுச் செயலாளா் சுந்தரராஜன், பொருளாளா் ஜெய்கணேஷ், துணைத் தலைவா் பாபுசங்கா், வழக்குரைஞா் அணி செயலாளா் மதன்பிரசாத், ஒன்றியச் செயலாளா் சிவசக்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சீா்காழி, பூம்புகாா், மயிலாடுதுறை தொகுதிகளில் மக்கள் மசோதா கட்சி போட்டியிடாமல், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.