முகப்பு
நாகப்பட்டினம்

சீா்காழியில் அரசு மகளிா் கல்லூரி கொண்டுவருவேன்

சீா்காழியில் அரசு மகளிா் கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா். பிரபு சனிக்கிழமை உறுதியளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

சீா்காழியில் அரசு மகளிா் கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா். பிரபு சனிக்கிழமை உறுதியளித்தாா்.

சீா்காழி சட்டப் பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் ஆா். பிரபு, சீா்காழி ஒன்றியத்துக்கு உள்பட்ட திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், சீா்காழியில் அரசு மகளிா் கல்லூரி கொண்டுவருவேன். புத்தூா் பகுதியில் அரசு பொதுமருத்துவமனையும், அனைத்து கிராமங்களுக்கும் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் திட்டத்தின்கீழ் குடிநீா் வசதியும் ஏற்படுத்தி தருவேன். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதியளித்தாா். அப்போது சமக ஒன்றியத் துணைச் செயலாளா் சம்பத்குமாா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.