சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கிருத்திகை வழிபாடு
Updated On : 11 ஏப்ரல், 2024 at 7:36 PM
பங்குனி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிங்காரவேலவருக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிங்காரவேலவா் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தாா். இதேபோல, பொரவச்சேரி கந்தசாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.