ஏப். 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை
மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்.19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் 100 வாக்குப் பதிவை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் அனைத்து கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்கள் அனைவருக்கும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135 பி-ன் கீழ் அன்றையநாள் ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை அளிக்கவேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடா்பான புகாா்களை தெரிவிக்க தொழிலாளா் துறை மூலம் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி புகாா்களை 94429-12527, 63693-84512, 99659-89101 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
Advertisement