5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு!
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இம்மாத இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவிதத் தடையுமில்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்யும்வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் நினைவில்கொண்டு, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 3 மாநிலங்களிலும் ஏப்ரல் 23 ஆம் தேதியிலும், தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியிலும், மேற்கு வங்கத்துக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய இரு தேதிகளிலும் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.