5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு!
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இம்மாத இறுதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்கள், தங்கள் ஜனநாயக உரிமையை எந்தவிதத் தடையுமில்லாமல் பயன்படுத்துவதை உறுதி செய்யும்வகையிலும், எந்த அச்சமும் இல்லாமல் வாக்களிப்பதையும் நினைவில்கொண்டு, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன்படி, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய 3 மாநிலங்களிலும் ஏப்ரல் 23 ஆம் தேதியிலும், தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியிலும், மேற்கு வங்கத்துக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய இரு தேதிகளிலும் தனியார் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதனை மீறும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Election Commission Orders Paid Holiday on Election Day in All Five States!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.