முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூரில் ரூ. 1.12 லட்சம் பறிமுதல்

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:33 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உதவி தோ்தல் அலுவலா் ரேணுகா தேவியிடம் ஒப்படைத்த அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 7:23 PM

கீழ்வேளூா் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1.12 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழ்வேளூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மேலப்பிடாகையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஸ்ரீரங்கபாணி தலைமையில் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கொளப்பாட்டைச் சோ்ந்த ராஜசேகரனை சோதனையிட்டதில், அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.1,12,400 கொண்டுசென்றது தெரிய வந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் அலுவலா் ரேணுகாதேவி , கூடுதல் தோ்தல் நடத்தும் அலுவலா் கவிதாஸ் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.