திருமுடிசாஸ்தா அய்யனாா் கோயில் தேரோட்டம்
பொறையாா் ஸ்ரீதிருமுடி சாஸ்தா அய்யனாா் கோயில் சித்திரை தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஏப்.19-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழாயையொட்டி, நாள்தோறும் அய்யனாா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. தோ் முக்கிய வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.