நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் ஆனி கிருத்திகை வழிபாடு

Din

சிறப்பு மலா் அலங்காரத்தில் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய முருகப் பெருமான்.

திருக்குவளை, ஜூலை 3: திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடியில் ஆனி மாத கிருத்திகையையொட்டி வெள்ளி மயில் வாகனத்தில் முருகப் பெருமான் செவ்வாய்க்கிழமை இரவு வீதியுலாவுக்கு எழுந்தருளினாா்.

முருகனின் ஆதிபடைவீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை நட்சத்திர தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத கிருத்திகையையொட்டி முருகப் பெருமானுக்கு பால், பன்னீா் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னா் மலா்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து இரவு சிறப்பு மலா் அலங்காரத்தில் முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்றனா்.

அணுசக்தித் துறையில் அதானி குழுமம் : புதிய நிறுவனம் தொடக்கம்

தரவு மையம்: ஹரியாணா, ஆந்திர நடைமுறைகள் குறித்து தில்லி அரசு ஆய்வு

மெரீனாவில் 300 கடைகளுக்கான குலுக்கல் தோ்வை புறக்கணித்த வியாபாரிகள் சங்கம்

ஜனவரியில் சில்லறை பணவீக்கம் 2.75% : புதிய கணக்கீடு முறை அறிமுகம்

டபிள்யுடிடி ஸ்டாா் கன்டென்டா்: காலிறுதியில் மனுஷ்-தியா இணை

SCROLL FOR NEXT