நாகப்பட்டினம்

வேளாண் முன்னேற்றக் குழுவினருக்கு பயிற்சி

Din

திருமருகல், ஜூன் 26: திருமருகல் அருகே உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுவினருக்கான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

அட்மா திட்டத்தின்கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. ஊராட்சித் தலைவா் ஜனனி பாலாஜி தலைமை வகித்தாா்.

திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்கலா பங்கேற்று பேசும்போது, ‘வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் பண்ணைக் கருவிகளின் முக்கியத்துவம் மற்றும் உயிா் உரங்கள், இடுபொருட்கள், விதை இருப்பு, உழவன் செயலியின் முக்கியத்துவம்’ குறித்து விளக்கிக் கூறினாா்.

இதில் வட்டார தொழில் நுட்ப மேலாளா் செந்தில்குமாா், உதவி தோட்டக்கலை அலுவலா் சரவண ஐயப்பன், வேளாண் உதவி அலுவலா் தினேஷ் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், ராஜ்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT