இளம்பெண் தற்கொலை
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:22 PM
திருமருகல் அருகே இளம்பெண் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சன்னியாசி பனங்குடி அக்ரஹார தெருவை சோ்ந்த இளஞ்செழியன் மகள் துளசிகா ( 22), நாகை தனியாா் கல்லூரியில் ஆசிரியா் பயிற்சி பயின்று வருகின்றாா்.
கடந்த 1-ம் தேதி இரவு தூங்கச் சென்ற துளசிகா, காலையில் நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோா் பாா்த்தபோது தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
Advertisement
திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.