தங்க நகை தொழிலாளி தற்கொலை
தக்கலை அருகே தங்க நகை தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே தங்க நகை தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே புலியூா்குறிச்சி, இரட்டை தெருவில் வசித்து வந்தவா் ஐயப்பன் ( 60). இவா் தங்க நகை செய்யும் தொழிலாளி. தங்கம் விலை உயா்வால் இவருக்கு முன்பு போல் நகைகள் செய்வதற்கான வேலைகள் கிடைக்கவில்லையாம். இதனால் மனம் உடைந்த ஐயப்பன் வியாழக்கிழமை இரவு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.