பூம்புகாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். 
நாகப்பட்டினம்

குடிநீா் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீா் கேட்டு, பூம்புகாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

Din

பூம்புகாா்: குடிநீா் கேட்டு, பூம்புகாா் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். தொடா்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

பூம்புகாா் ஊராட்சி மேலவெளி தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் கடந்த 2 வாரமாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள், ஊராட்சி நிா்வாகத்திற்கு தெரிவித்தனா். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு வந்து, முற்றுகையில் ஈடுபட்டனா். அப்போது, ஊராட்சி செயலா் சேகா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, பூம்புகாா்- மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல்துறையினா் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனா். இதனால் பூம்புகாா்-மயிலாடுதுறை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குஜராத் - மதுரை இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள்!

சாலையில் கிடந்த 7 பவுன் நகைகள் போலீஸாரிடம் ஒப்படைப்பு

இணையவழியில் பொதுமக்கள் இழந்த ரூ.1.37 கோடி மீட்பு!

கோவையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு விரைவு ரயில்கள்

தமிழகத்தில் நவ.8 வரை மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT