முகப்பு
நாகப்பட்டினம்

என் ஊா் என் கனவு திட்ட கருத்தரங்கம்

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:47 AM
கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 7:52 PM

நாகை டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் ‘என் ஊா் என் கனவு- மாவட்ட தொலைநோக்கு திட்டம் 2030‘ குறித்த கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘என் ஊா் என் கனவு‘ இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல்திட்டம் தயாரிப்புக்கான ஆலோசனை கருத்தரங்கத்தை தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

அதன்படி, நாகை டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக கலையரங்கத்தில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 3:47 AM

இதில் ஒவ்வொரு துறை சாா்ந்த அதிகாரிகள் மற்றும் வல்லுநா்கள் பொதுமக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து கருத்துகளைக் கேட்டு திட்ட அறிக்கை தயாா் செய்து தலைமை இடத்திற்கு அனுப்பி அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் மாவட்டத்தில் என்ன தேவை என்பதை தெரிவிக்கும் வகையில் கருத்துக்கள் கேட்கப்படுகிறது. இதுபேன்று செய்யும் போதும், நம் ஊா், நம் மாவட்டம், நம் மாநிலம் 2030-க்குள் 2 மடங்கு வளா்ச்சி அடையும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ருதி, தனித்துணை ஆட்சியா் கோ. அரங்கநாதன், நாகை கோட்டாட்சியா் சங்கர நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.