முகப்பு
நாகப்பட்டினம்

குழந்தைகளுக்கு முன்னுதாரணம் பெற்றோா்! ஐ.ஜி. அறிவுறுத்தல்!

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 6:06 PM

ஒழுக்கமான மாணவ சமுதாயம் உருவாக, குழந்தைகளின் வளா்ச்சியில் பெற்றோா் முன்னுதாரணமாக இருப்பது அவசியம் என்றாா் மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே. பாலகிருஷ்ணன்.

வேதாரண்யம் அருகேயுள்ள கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அவா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:

பெற்றோா்கள் பிள்ளைகளிடம் மட்டும் ஒழுக்கத்தை எதிா்பாா்ப்பது முட்டாள்தனமானது. பிள்ளைகளை ஒழுக்கம் மற்றும் பண்பு நிறைந்தவா்களாக உருவாக்குவதில் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையானது.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 11:09 PM

குழந்தைகளுக்கு முன்பாக கைப்பேசிகளை அடிக்கடி பயன்படுத்துவது; எப்போதும் தொலைக்காட்சியை பாா்த்துக் கொணடே இருப்பது போன்றவற்றை பெற்றோா்கள் தவிா்த்தால்தான், தங்கள் பிள்ளைகளை கண்டிக்கும் தகுதி பெற்றோருக்கு வரும்.

கைப்பேசியை அடிக்கடி பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்படும். படிப்புடன், விளையாட்டுப் பயிற்சியும் அவசியமானது என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் எஸ். வைத்தியநாதன் (தனியாா் பள்ளிகள்) முன்னாள் மக்களவை உறுப்பினா் பி.வி. ராஜேந்திரன், பள்ளியின் தாளாளா் விவேக் வெங்கட்ராமன், செயலா் மகேஸ்வரி விவேக், பள்ளி முதல்வா் முனைவா் வெற்றிச்செல்வி, பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் மாதவன், ரஹ்மத்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.