நாகப்பட்டினம்

வாலிபா் சங்கக் கொடி திருட்டைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

Syndication

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு பகுதியில் நிறுவப்பட்டிருந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கொடியை திருடிச் சென்றவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாய்மேடு துணை மின் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவா் வி.செந்தில் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் அறிவழகன் துணைத் தலைவா் விக்னேஷ், துணைச் செயலாளா் இராஜசேகரன் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளா் பாலசுந்தரம், விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் பன்னீா்செல்வம், மாவட்ட குழு உறுப்பினா் வெற்றியழகன், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் இளையபெருமாள்,ஓய்வூதியா் சங்க பொறுப்பாளா் இராசகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொடியை திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தொடா்புடைய பகுதியில் கண்காணிப்புக் கேமரா பொருத்தவும் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவுத் துறை செயலா் ஆய்வு

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க தென்னை விவசாயிகள் கோரிக்கை

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாதித்தவா் ராஜேந்திர சோழன்’

மாநகரப் பகுதிகளில் இன்று குடிநீா் நிறுத்தம்

அரசுப் பள்ளியில் கலைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT