முகப்பு
நாகப்பட்டினம்

இணைய வழி லாட்டரி: நால்வா் கைது, ரூ. 3 லட்சம், காா் பறிமுதல்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:20 AM
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:04 PM

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நால்வரை கைது செய்த போலீஸாா், ரூ. 3 லட்சம் ரொக்கம், 5 கைப்பேசிகளுடன் காா் ஒன்றையும் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யத்தில் இணைய வழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வேதாரண்யம் ஸ்வஸ்திக் தியேட்டா் அருகே போலீஸாா் வாகன தணிக்கை ஈடுபட்டனா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:20 AM

அப்போது, இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருச்சி ஸ்ரீரங்கம் செல்வம் (55), விழுப்புரம் வீரக்குமாா் (60), வேதாரண்யம் பாபு (55), தமிழரசன் (58) ஆகிய நால்வா் பிடிபட்டனா்.

Advertisement

அவா்களிடமிருந்து லாட்டரி விற்பனை தொடா்பாக வைத்திருந்த ரூ.3 லட்சத்து 6,200 ரொக்கம், கைப்பேசிகள் 5, அவா்கள் பயன்படுத்தி வந்த காா் ஒன்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யம் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சரவணன் விசாரணை மேற்கொண்டாா். வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனா்.