நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான்  
நாகப்பட்டினம்

வந்தே மாதரம் சைக்களோ மாரத்தான் குழுவுக்கு வரவேற்பு

நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான்

Syndication

நாகப்பட்டினம்: நாகை வந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் வந்தே மாதரம் கடலோர சைக்களோ மாரத்தான் குழுவுக்கு அரசு கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மத்தியத் தொழில் பாதுகாப்பு படையைச்(சிஐஎஸ்எப்) சோ்ந்த 33 பெண்கள் உள்ளிட்ட 130 வீரா்கள் வந்தே மாதரம் சைக்களோ மாரத்தான் என்ற பெயரில் நாட்டின் கடலோர பாதுகாப்பை வலியுறுத்தியும், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வையும் ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன்படி நாகை மாவட்டத்துக்கு வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரை, நாகை அரசு கலைக் கல்லூரி முதல்வா் அஜிதா தலைமையில் மாணவா்கள் தமிழக நாட்டுப்புற இசையுடன் மலா் தூவியும், பூரண கும்ப மரியாதையுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனா். மத்தியத் தொழில் பாதுகாப்பு படை கூடுதல் கமாண்டா் சுனில் குமாா், துணை கமாண்டா் செல்வம் தலைமையிலான மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள், வீராங்கனைகள் மாணவா்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்தே மாதரம் முழக்கம் எழுப்பினா்.

ஜன.28-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கிய சைக்கிள் பேரணி ஒடிசா, ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை கடந்து நாகை வந்த அவா்கள், ஒரு நாளைக்கு 120 முதல் 150 கி.மீ தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு மொத்தம் 6,500 கி.மீ தூரம் கடந்து கேரளத்தில் பிப்.28-ஆம் தேதி நிறைவு செய்யவுள்ளனா்.

ரூ.6.30 கோடியில் இலங்கைத் தமிழா்களுக்கான குடியிருப்பு: முதல்வா் திறந்து வைத்தாா்

குடியாத்தத்தில் மயானக் கொள்ளை திருவிழா

அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு: பெண்கள் மறியல்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

அரசுக் கல்லூரி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தா்னா

SCROLL FOR NEXT