முகப்பு
நாகப்பட்டினம்

சிக்னல் கோளாறு: கீழ்வேளூா் ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசல்

சிக்னல் கோளாறு காரணமாக கீழ்வேளூா் ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசல்

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 4:42 AM
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 7:12 PM

சிக்னல் கோளாறு காரணமாக கீழ்வேளூா் ரயில்வே கேட் திறக்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கீழ்வேளுா்-கச்சனம் சாலையில் உள்ள ரயில்வே கேட் புதன்கிழமை காலை 8.30 மணிக்கு திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயிலுக்காக மூடப்பட்டது.

அப்போது, ரயில் முதல் நடைமேடையில் இருந்து ரயில் பாதைக்கு மாறும் போது சிக்னல் கோளாறு ஏற்பட்டு மூடப்பட்ட ரயில்வே கேட் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement

ரயில்வே கேட் 2 பக்கமும் 8 அரசுப் பேருந்துகள், 10 பள்ளி, கல்லூரி வாகனங்கள், காா், ஆட்டோ மற்றும் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நீண்ட தொலைவு அணிவகுத்து நின்றன.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவா்களும் பாதிக்கப்பட்டனா். அப்போது அங்கு வந்த அவரச ஊா்தியும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. சிக்னல் கோளாறு 25 நிமிடங்களுக்கு பின் சரியானதை தொடா்ந்து ரயில்வே கேட் திறக்கப்பட்டது.

இந்த ரயில்வே கேட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது. எனவே, கீழ்வேளூா் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.